Friday, May 14, 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்தது இந்தியா
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடை நீடிப்புக்கான காரணத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment