Wednesday, May 5, 2010

பிறந்த நாள் பார்ட்டி – கலக்கல் காக்டெயிலுடன் கொண்டாடினார் த்ரிஷா..!

தனது பிறந்த நாளை காலையில் ஒருவிதமாகவும், மாலையில் வேறொரு விதமாகவும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நடிகை த்ரிஷா.


நடிகை த்ரிஷாவுக்கு நேற்றுதான் பிறந்த நாள். இந்த பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார். சாதாரணமாக வெயில் காலத்தில் மழையடித்தால்கூட பார்ட்டி வைக்கும் கலாச்சாரத்தில் திளைப்பவர் த்ரிஷா. பிறந்த நாள் என்றால் விட்டுவிடுவாரா என்ன..?

நள்ளிரவே, வீட்டை அலங்கரித்து, பெரிய கேக் ஆர்டர் செய்து நண்பர்கள் மற்றும் தாயார் உமாவின் முன்னிலையில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி மகிழ்ந்தாராம்.

பொழுது விடிந்ததும், உதவும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கும் போய், அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஆடம்பரமான கலக்கல் காக்டெயில் பார்ட்டிக்கு த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவருடைய தங்கை வினயா கிருஷ்ணன், காஸ்ட்யூம் டிஸைனர் ப்ரியாமணிகண்டன், த்ரிஷாவின் நீண்ட நாள் பாய்பிரெண்ட் சிட்னி ஸ்லேடன் என்று த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்கள், திரையுலகப் புள்ளிகள் பங்கேற்றுள்ளனர்.

பிறந்த நாள் குறித்து த்ரிஷா கூறுகையில், "வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள் இது. 400 குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் இந்த நாளைக் கொண்டாடினேன். அதற்கு முன்பு என் அம்மா செய்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் ஒரு இளவரசியைப் போல உணர்ந்தேன்.

இந்தப் பிறந்த நாள் பல வகையிலும் விசேஷமானது. தொடர்ச்சியான வெற்றிகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எனது முதல் இந்திப் படம் வெளியாகிறது. இதெல்லாவற்றுக்கும் மேல் கமல்ஹாஸனுடன் எனது முதல் படம் விரைவில் துவங்க உள்ளது...", என்றார்.

த்ரிஷாவுக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்..!

1 comment:

  1. ஏன் உங்களை கூப்பிடலையேன்னு கோபமா..?

    ReplyDelete