Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, September 23, 2010

இந்தியா வருகிறது "எந்திரன்" ரோபோட்


இதுவரை ஹாலிவுட் பட உலகுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த ஆன்ட்ரொய்ட் வகை ரோபோக்கள் எந்திரன் ப‌டத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் அப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் பயன்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க....

Saturday, July 10, 2010

மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியின் நேர்காணல் தொடர்ச்சி















அல்பாஷா : அப்படியாயின், சனநாயகம் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?


கோபால்ஜி : எங்களது உடனடியான குறிக்கோள், ஒரு புதிய சனநாயகப் புரட்சியாகும். புதிய சனநாயக இந்தியாவில், அதிகாரம் என்பது நான்கு வர்க்கங்களில் கூட்டணியிடம் இருக்கும். பாட்டாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டணியாக அது இருக்கும். இதில் எந்தவொரு தனிவர்க்கமும் அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. புதிய அரசு விவசாயிகளை நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து விடுதலை செய்யும். தேசிய மூலதனத்தைத் தரகு மூலதனத்திலிருந்து விடுவிக்கும். தரகு முதலாளிகளின் உடைமைகள் பறி முதல் செய்யப்படும். அயல்நாட்டுக் கடன்கள் இரத்து செய்யப்படும். பண்ணையார்களிடமிருந்து உபரி நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பிரித்தணிக்கப்படும். சமூகம், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்து வத்தையும் ஒழிக்கும்.

புதிய சனநாயகப் புரட்சி உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக இந்தியாவை உருவாக்கும். அதில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன்னுரிமையும், பிரிந்து போகும் உரிமையும் அங்கீகரிக்கப்படும் புதிய சனநாயக அரசு எந்தவொரு மதத்தையும் ஆதரிக்காது. மதம் தனி மனிதரின் சொந்த விசயமாக இருக்கும். வேலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சமவாய்ப்பு இருக்கும் என்பதுடன் ஒவ்வொருவரும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

அல்பா ஷா : அரசின் வளர்ச்சித் திட்டங்களை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்?

கோபால்ஜி : பொது மக்களின் வளர்ச்சி பற்றி இந்திய அரசு குறைந்த அளவிற்குக்கூட அக்கறை இல்லாமல் இருக்கிறது. அரசின் கணக்குப்படி, 77% மக்கள் ஒரு நாளைக்கு %.20க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதன்படி, 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 62 ஆண்டுக்கால சுதந்தரத்துக்குப் பின் இத்தகைய கேவலமான நிலை! ஆனால் அதே சமயம் சில இந்தியர்கள் கோடீசுவரர்களாகி வருகின்றனர். இந்திய அரசு இதுபற்றிப் பெருமிதம் கொள்கிறது.

பங்குச்சந்தைக் குறியீட்டு எண், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தக் கூடாது. சில பணக்காரர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று அரசு கருதுகிறது. சாதாரண மக்களின் அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசு அக்கறையின்றி இருக்கிறது. உலகவங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் அறிவுரைகளின்படி, தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய இயற்கை வளங்களை, நிலங்களை, காடுகளை, இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய எசமானர்களுக்கும் விற்றிட முயல்கின்றனர்.

தற்செயல் நிகழ்வாக, மாவோயிஸ்டுகள் வலிமையுடன் உள்ள ஜார்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இயற்கை வளங்கள் மிகுந்து உள்ளன. இந்தியாவின் இயற்கை வளங்களில் 80%  இப்பகுதியில் உள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கி, இப்பகுதியிலிருந்து விரட்டாத வரையில், நிலத்தையும் இயற்கை வளத்தையும் அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களுக்கு வெளிப்படையாக விற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அல்பா ஷா : கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

கோபால்ஜி : அப்படியில்லை. சுரங்கம் தோண்டுவது அல்லது ஆலைகள், தொழிற்சாலைகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நம்முடைய இயற்கை வளங்களும், தாயக நிலமும் இந்தியப் பெருமுதலாளிகளாலும், அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களாலும், அவர்களுடைய சொந்த இலாபத்திற்காகச் சூறையாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களின் மேம்பாட்டிற்காக ஆலைகளையும் சுரங்கங்களையும் அமைக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டுவதில்லை. இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று நெருக்குதல் தரப்படுகிறது. அவ்வாறு வெளியேறாவிடில், அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். நகரங்களில் இம்மக்கள் கூலியாட்களாக வாழும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டனர். அதைப் போலவே இப்போதும் நிகழும். பொக்காரோவிலும் மற்ற இடங்களிலும் பெருந்திட்டங்களைச் செயல்படுத்திய போது, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர்க்கு, நிலமோ, வீடோ, அங்குக் கட்டப்பட்ட ஆலையில் வேலையோ வழங்கப்படவில்லை. பல ஆயிரக் கணக்கில் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டனர்.

எனவே, மீண்டும் அதுபோல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இயற்கை வளங்கள் கொள்ளை போவதையும், சூறையாடப்படுவதையும் எதிர்த்திட நாங்கள் மக்களை அணிதிரட்டுகின்றோம். எங்களுடைய நிலமும், இயற்கை வளங்களும் ஏகாதிபத்திய வாதிகளாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் இந்தியப் பெரு முதலாளிகளாலும் சூறையாடப்படுவதை அனுமதிக்க மாட்டோம். மாவோயிஸ்டு அரசில், ஆலைகளை, சுரங்கங்களை அமைப்பதற்குமுன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலில் சுரங்கங்களும் ஆலைகளும் நாட்டுடைமையாக்கப்படும். நாட்டின் நலனுக்காக அவை இயங்கும். முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக அவை செயல்படா. இரண்டாவது, பொதுவாகப் பயிரிடப்படும் நிலங்களைச் சுரங்கம் வெட்டுவதற்காகவோ, பிறவற்றுக்காகவோ எடுக்கக் கூடாது. மூன்றாவதாக, அவ்வாறு நிலங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளபோது, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்ததற்கு உரிய இழப்பீடும், வேலையும், வீடும், பயிரிடுவதற்கு சிறுபகுதி நிலமும் அளிக்கப்பட வேண்டும். புதிய சனநாயக அரசு இடம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றுச் செயல்படும்.

நான்காவதாக, இச்சுரங்கங்களும் ஆலைகளும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில் அமைக்கப்படும். அய்ந்தாவதாக, இத்திட்டங்களை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல் பெறப்படும். சுரங்கங்களையும் ஆலைகளையும் நிர்வாகம் செய்வதில் அம்மக்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும். இந்தியாவில் புதிய சனநாயக அரசு அமையும் போது, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் அரசு செயல்படும்.

அல்பா ஷா : ஜார்கண்ட் பகுதியில் உங்கள் கட்சி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளின்  திட்டவட்டமான சாதனைகள் எவை?

கோபால்ஜி : உழைக்கும் மக்களும், நிலமற்ற தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் இந்தியாவில் ஓர் ஆற்றல் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக உருவாகியுள்ளனர். இதுவே எமது முதலாவதும் முதன்மையானதுமான சாதனையாகும். நாங்கள் போராடும் பகுதிகளில் நிலப்பிரபுத்துவ அதிகாரம் என்பது பெரும்பகுதி தகர்க்கப்பட்டுவிட்டது. இப் பகுதியில் போராடும் மக்கள் தமக்கெனத் தனியாக கொரில்லாப் படையை  அமைத்து உள்ளனர்.

காலங்காலமாக இழிவாக நடத்தப்பட்டு வந்த தலித்துகளும், பழங்குடியினரும் இப்போது சமூகத்தில் உரிய இடமும், மதிப்பும் பெற்றுள்ளனர். இது எமது இரண்டாவது சாதனை. பெண்களை, தலித்துகளை, பழங்குடியினரை இழிவாக நடத்தும் போக்குகளும், காட்டுப்பகுதிகளில் மேல்சாதியினரும் அயலாரும் செலுத்தி வந்த ஆதிக்கமும் வேகமாக மாறத்தெடங்கி உள்ளன. ஊழல் மலிந்த, கொடிய வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மூன்றாவது சாதனை

யாகும். வனத்துறையின் கீழ்நிலை ஊழியர்கள்கூட கடுமையான ஒடுக்கு முறைகளை ஏவினர். ஆனால் இவர்கள் மாஃபியா கும்பலின், பண்ணையார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து காடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் காடுகளில் சுதந்தரமாக நடமாடி, தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். காடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் தடுத்து வருகிறோம். நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டம் எமது நான்காவது சாதனையாகும். எங்கள் போராட்டப் பகுதிகளில் மக்கள் சனநாயக உரிமைகளைத் துய்க்கின்றனர். பண்ணையார்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பெரும்பாலான இடங்களில் பண்ணையார்களை கிராமங்களை விட்டு விரட்டியுள்ளோம். பல இடங்களில் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். நிலத்தை இதற்கு முன் உழுது கொண்டிருந்த நிலமற்றவர்களுக்கும், ஏழை உழவர்களுக்கும் இந்நிலங்களைப் பிரித்து அளித்துள்ளோம்.

ஜார்கண்டிலும் பீகாரிலும் விவசாயக் கூலி மிகவும் குறைவாக இருந்தது. காடுகளில் டெண்டு இலைகளையும் பிற பொருள்களையும் பொறுக்கி எடுத்து வருவதற்கான கூலி மிகவும் குறைவாக இருந்தது. எனவே அதிகக் கூலி கேட்டுப் போராடுமாறு செய்தோம். எனவே தற்போது முன்னைவிட அதிகக் கூலி பெறுகின்றனர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திருட்டையும் வழிப்பறியையும் ஒழித்து விட்டோம். அத்துடன், அரசோ அல்லது பெரிய ஒப்பந்தக்காரர்களோ குளம், ஆற்றுப்படுகை, கடைவீதி, தோப்புகள் முதலானவற்றை ஏலம் விடும் முறைக்கு முடிவுகட்டி விட்டோம். எனவே இவற்றை மக்கள் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கள் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதியில் வகுப்பு மோதல் இல்லை. சங்பரிவாரக்  குண்டர்கள் எம் பகுதியில் வகுப்பு மோதலை உண்டாக்கத் துணியமாட்டார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் அவ்வாறு முயன்றபோது, ஒரிசாவில் கந்தமாலில் சாமி இலட்சுமானந்தாவைத் தண்டித்தது போல் தண்டனைகள் தருகின்றோம். மற்றொரு முக்கியமான சாதனை என்னவெனில், முதலாளிகள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருவதாகும். எனவே, நிலத்தையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரையில், நடுவண் அரசில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாத வரையில் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த இயலாது. இருப்பினும், எங்கெல்லாம் புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் மக்களுக்கு நலம் பயக்கும் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். வேளாண்மையிலும் வேளாண்மை சார்ந்த பிற தொழில்களிலும் கூட்டுறவு முறையை ஊக்குவித்துள்ளோம். மிகவும் பின் தங்கிய பகுதிகளின், கூலியில்லா விருப்ப உழைப்பைக் கொண்டு கிணறுகள், குளங்கள், கால்வாய்களை வெட்டி வருகின்றோம். பள்ளிகளை மருத்துவமனைகளைத் திறந்துள்ளோம். குறைந்த விலையில் மருந்துகளை அளிக்கின்றோம். புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இப்பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆயினும் இவை தொடக்க நிலைப் பணிகளேயாகும்.

அல்பா ஷா : இந்திய அரசு மாவோயிஸ்டு கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கோபால்ஜி : பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது என்பது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருப்பதன் ஒரு பகுதியே ஆகும். தெற்காசியப் பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இந்திய ஆளும்வர்க்கம் உருவாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிரானது என்று கருதப்படுகின்ற எந்த ஒரு இயக்கத்தையும் அல்லது எந்தவொரு எதிர்ப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் தான், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன எழுச்சிப் போராட்டங்களையும், உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் பயங்கரவாதச் செயல்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவதன் மூலம், மாவோயிஸ்டு கட்சியின் மக்கள் திரன் அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களை  - சனநாயக உணர்வு கொண்டோரை எளிதில் கைது செய்ய முடியும். அரசின், சனநாயகத்துக்கு விரோதமான செயல்களை, அதன் ஒடுக்கு முறைகளைக் கண்டித்துப் பேசுவோரைக் காவல்துறை கைது செய்வதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளர்கள், மக்கள் உரிமை இயக்கத்தினர் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். எனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இரண்டாவதாக, எங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கண்மூடித்தனமாகக் கொல்வது, அப்பாவி மக்களைக் கொல்வது பொதுவாகப் பயங்கரவாதச் செயலில் நிகழும். அத்தகைய கொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். குறிப்பாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிரானவர்கள் நாங்கள். கிராமப்புறங்களில் அப்பாவி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எச்செயலையும் நாங்கள் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆயுதமேந்திய எங்கள் படையினர் அத்தகைய தவறைச் செய்யும் போது நாங்கள் எமக்குள் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறோம்.

எங்கள் தத்துவம் மார்க்சியம் - லெனினியம் - மாவோயிசம் என்பதாகும். இந்தியாவை உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவது வஞ்சமும் தந்திரமும் கொண்ட சூழ்ச்சியாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று இந்திய அரசு நினைக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதால், எங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் நாங்கள் தொடக்கக் காலம் முதலே தலைமறைவு இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, பொது மக்களைக் குறிப்பாக, போராட்டப் பகுதிகளில் உள்ள மக்களைத் துன்புறுத்துவதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரம் தருவதற்காகவேயாகும்.

அதேசமயம் இதன் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்லாயிரம் இராணுவத்தினரும் துணை நிலைப்படையினரும் என்ன செய்வது கொண்டிருக்கிறார்கள்? போலி மோதலில் அன்றாடம் இளைஞர்களைச் சுட்டுக்கொன்று கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் போராடுகின்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் என்ன செய்கிறார்கள்? நூற்றுக் கணக்கில் இளைஞர்களைக் கொல்கிறார்கள். ஆளும் வர்க்கத்தினர் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1984 கலவரத்தில் சீக்கியர்களைக் கொன்று குவித்தார்கள். அண்மையில் ஒரிசாவில் கிறித்தவர்களையும், 2002இல் குசராத்தில் இசுலாமியரையும் ஆயிரக்கணக்கில் கொன்றனர். இக் கலவரங்களில் எத்தனை இந்து வெறியர்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்? 1947 முதல் காவல் துறையும் இந்தத்துவ சக்திகளும் கைகோத்துச் செயல்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அய்ந்து இலட்சம் விவசாயிகள் அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-09ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்றாடக் கூலிகளாக மாறிவிட்டனர். பட்டினியால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். உட்சா பட்நாயக் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு ‘வறுமைக்குடியரசு’. இச்சாவுகளுக்குயார் பொறுப்பு? பட்டினியாலும் பசியாலும் பிற நோய்களாலும் பல்லாயிரம் மக்கள் மடிந்து கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் அவலத்தை - இன்னலை கேட்பதற்கு யாருமில்லை! இந்திய மக்கள் மீது அரசு வன்முறையைத் திணிக்கிறது.

அல்பாஷா : போர் தீவிரமடைந்து வருகிறது. அரசும் தன்னுடைய இராணுவத் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது. இருதரப்பினருக்குமான போரில் ஏழை விவசாயிகள் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். உங்களிடம் ஏ.கே.47 துப்பாக்கிகளும் கண்ணி வெடிகளும் உள்ளன. அதனால் உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். இச்சண்டையில் சாதாரண கிராமமக்கள் மடியப்போகிறார்கள். இதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

கோபால்ஜி : மன்னிக்க வேண்டும். உங்கள் கேள்வியே தவறான முறையில் கேட்கப்பட்டுள்ளது. இப்போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் அன்று. இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான போர். மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி என்பது என்ன? மக்கள் விடுதலை கொரில்லாப்படை என்பது என்ன? இவை மக்கள் வலிமையாக அணி திரண்டுள்ள அமைப்புகளே தவிர வேறு அல்ல. ஆகவே மாவோயிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சியை - மக்கள் விடுதலை கொரில்லாப்படையை அரசுப்படைகள் தாக்குவது மக்கள் அணிதிரள்வதையே ஒடுக்குவதாகும். மக்கள் இதை உணர்த்திருக்கிறார்கள். எனவே இத்தகையபோர் என்பது எங்கள் கட்சிக்கு எதிரான போர் அன்று. இது மக்களுக்கு எதிரான போரேயாகும்.

அல்பா ஷா : மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேறல்ல; மக்கள் வேறல்ல; இரண்டும் ஒன்றே என்று நீங்கள் கூறுவதைப் போலவே இந்திய அரசும் மக்களும் வேறு வேறானவர் என்று நீங்கள் பிரித்துக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் தாக்குதலின் இலக்காக இருக்கின்ற காவல்துறையினர் - உங்களுடைய ஆதரவாளர்கள், கொரில்லாப்படையினர் எந்தக்குடும்பங்களிலிருந்து வந்துள்ளனரோ, அதே குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற காவல்துறையினரை நீங்கள் ஏன் கொல்லுகிறீர்கள்?

கோபால்ஜி : பொதுவாகப் போலீசுக்காரர்கள் கிராமப்புற ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பதும், எங்கள் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதும் உண்மை. போலீசுக்காரர்கள் எங்கள் பகுதியைக் கைப்பற்ற வரும்போது, எம்மீதான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போது, மக்களையும் மக்கள் இயக்கத்தையும் ஒடுக்க முனையும் போது மட்டுமே எங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகின்றேன்.

காவல்துறையிலும் இராணுவத்திலும் பல இடங்களில் பணியாற்றும் பலபேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் குடும்பத்தினரின் பிள்ளைகள். இவர்களுடைய குடும்பத்தினர் எங்கள் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். விழாக்காலங்களிலோ, வேறு விடுமுறைகளிலோ காவல்துறையிலும் இராணுத்திலும் பணியாற்றுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கும் போது அவர்களை நாங்கள் தாக்குவதில்லை. அப்படியான ஒரு நிகழ்ச்சி கூட நடந்ததில்லை. அடுத்து பொதுவாக மாவட்ட அளவில் இயங்கும் போலீசாரை நாங்கள் தாக்குவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களைத் தாக்க வரும் போதும், மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒடுக்கப்படும்போது மட்டுமே நாங்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

போரில் எதிரி, நம் சொந்த வர்க்கத்தினரையே நம்மீது ஏவிவிடும் போது, அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. காவல்துறையிலும் இராணுவத்திலும் பணியாற்றுவோருக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான். நீங்கள் எந்த அரசுக்காகப் போராடுகிறீர்களோ, அது உங்களுக்கான அரசு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஆளும் வர்க்கத்திற்காகச் சேவை செய்கிறீர்களோ அவர்கள் உங்கள் குடும்பங்களின் நலனுக்கு எதிரானவர்கள். எனவே, பிற்போக்குத்தனமான இராணுவத்திலிருந்தும் காவல்துறையிலிருந்தும் விலகி மக்கள் விடுதலை கொரில்லாப் படையில் சேருங்கள் என்பதே எங்கள் அழைப்பாகும்.         

(சிந்தனையாளன் ஜூன் 2010 இதழில் வெளியானது)

நன்றி : கீற்று

மேலும் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்...

Wednesday, June 2, 2010

இலங்கை தொடர்பாக புதுடில்லியின் தற்போதைய நிகழ்ச்சி நிரல் என்ன?













இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? கடந்த இரு தசாப்த காலங்களாக சமஷ்டி முறைமையை உள்வாங்குமாறும் அதிகாரத்தை பரவலாக்குமாறும் இலங்கைக்கு நம்பிக்கையூட்டுவதற்கான முயற்சிகளை புதுடில்லி மேற்கொண்டு வந்தது. இப்போது புதுடில்லியின் நிகழ்ச்சிநிரல் என்ன?இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் குல்திப் நய்யார்.

இந்தியாவின் த ரிபியூன் பத்திரிகையில் இலங்கை தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்த வேண்டுமென்ற தலையங்கத்தில் குல்திப் நய்யார் எழுதிய கட்டுரையொன்று நேற்று புதன்கிழமை த ரிபியூனியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 31, 2010

நாளைய ஈழமும் இந்திய வல்லரசும்













ஓராண்டு கடந்துவிட்டது... வன்னியில் எழுதப்பட்ட நம் வீரவரலாறு ரத்தம் தோய்ந்த ஈழமண் கூப்பிடும் தூரத்தில்தான் கேட்டது மரண ஓலம். உயிரை ஆயுதமாக்கிய முத்துக்குமரன்களின் இறுதியாத்திரை இந்திய அரசியலில் ஒரு துரும்பையும் அசைக்கமுடியவில்லை. வாசனைத் தைலமிட்டு சீவிச்சிங்காரித்து மலர்ச்சூடி மனிதனின் தலையில் இருப்பதால் அதுக்கு கூட மதிப்புண்டு கேட்டுபாருங்கள் கோவிலுண்டியலில் பணமாக மாறும் அதன் வித்தையை! சே என்னடா இது தமிழன் அதுவாகக் கூட இல்லையே என்று எவனுக்கும் வருத்தமில்லை.

இந்தியத்தமிழன்

ஈழத்தமிழர்கள் குறித்து போட்டிப்போட்டுக்கொண்டு அறிக்கை யுத்தங்கள் நடத்திய நம் அரசியல் தலைவர்கள், அவர்களுக்குஎந்த வகையிலும் குறையாமல் உலகத் தமிழர்கள் அனுப்பிய விசாவில் உலகமெல்லாம் சுற்றிவரும் நம் தமிழினத் தலைவர்கள்,.. அடிக்கடி எங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது நாங்களும் தமிழர்கள்தான் என்று தமிழ் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்த கூடிக் கலைந்து மீண்டும் கூடிக் கலைந்து... நேரடியாக வீரவசனங்களை உதிர்த்து கலைகின்ற நம் திரைப்பட வெள்ளித்திரை சின்னத்திரை நாயக நாயகியர் கவிஞர்கள் குழாம் இயக்குநர் சிகரங்கள் வரிசை, ஒப்பாரிக்கவிதைகள் பாடி அரித்துக்கொண்டிருக்கும் மன உணர்வுகளைச் சொரிந்துக் கொண்டு யாருக்குச் சொரிந்துவிட்டால் யாருக்கு லாபம் ? என்ற கணக்கில் குழுச்சண்டைகளைத் தொடரும் மேன்மைமிகு இலக்கிய அறிவுஜீவிகள் இப்படியாக ஈழப்போராட்டத்தில் இன்று வெளிப்படையாகத் தெரியும் எவராலும் ஈழமக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பது மிகவும் வெளிப்படையான உண்மை.

இலவசங்களில் தமிழன் சோரம்போகி ஆண்டுகள் பலவாகிவிட்டது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 25, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமானதாம்; இந்திய‌ மத்திய அரசு அறிவிப்பு













தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர அரசாணை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை சட்டவிரோதமாக அறிவித்திருப்பதற்குக் காரணம், புலிகளை ஆதரிக்கும் பத்திரிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தவே என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவசர‌ அரசாணையில்(எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 19, 2010

'தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்' : அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் பாயில்













பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபலமான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். அவர் தமிழக தமிழ் சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சினைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது.

கடந்த ஆண்டு சென்னை உட்படப் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தமிழீழ ஆர்வலர்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டார்.

அவருடன் ஜூ.வி-க்காக ஒரு பிரத்யேக பேட்டி!

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 14, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்தது இந்தியா













தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடை நீடிப்புக்கான காரணத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 13, 2010

இந்தியா விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல: ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதே; தினமணி குற்றச்சாட்டு













இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில், அங்கு தமிழர்களின் இருப்பையே அடியோடு பிடுங்கி எறியும்வகையில் காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட, இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. “விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல’ என்று சொன்னதெல்லாம் பொய்தானே?

இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழகத்திலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ். அந்த நாளிதழின் இன்றைய பதிப்பில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மேலும் எழுதப்பட்டிருப்பதாவது:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

உண்மையிலேயே சபிக்கப்பட்ட இனமா ஈழத்தமிழினம்?













அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈழத்தமிழ் மக்களின் படகு ஒன்று பழுதடைந்ததால் அதில் இருந்த 5 தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அவுஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற ஈழத் தமிழ் மக்களின் அகதிகள் படகு ஒன்று கடந்த வாரம் நடுக்கடலில் பழுதடைந்திருந்தது. அதனை தொடர்ந்து அதில் இருந்து கடலில் குதித்த ஐந்து தமிழர்களை தேடிக் கண்டறிவதற்கு அவுஸ்திரேலியா படையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவை கைவிடப்பட்டுள்ளன.

15 சிறுவர்கள் உட்பட 60 பேர் பயணம் செய்த படகில் அவர்கள் பயணித்திருந்தனர். அவர்களின் படகு கொக்கொஸ் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டது. இயந்திரம் பழுதடைந்ததால் அங்கு தத்தளித்த அந்த படகில் இருந்து உயிர்க்காப்பு அங்கிகளை அணிந்த ஐந்து தமிழ் மக்கள் உதவி கோரி கடலில் குதித்ததாக படகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 6, 2010

ஒரு சாமானியத் தமிழனின் மனம் திறந்த மடல்













இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் கொடுந்தாக்குதல்களுக்கு ஆளாகி ஈழத் தமிழ் மக்கள் கடந்த பல்லாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களையும் எதிர்கொண்டு வரும் இன்னல்களையும் நாடறியும். தாங்களும் அறிவீர்கள்.

தமிழகத்தில் இச்சிக்கல் குறித்து அக்கறையுடைய அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வப்போது நடத்திய போராட்டங்கள், அனுப்பிய கடிதங்கள், மனுக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக சட்டமன்றமே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு மனதோடு நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களும் தங்களின் மேலான பார்வைக்கு வந்திருக்கும் என நம்புகிறோம்.

எனினும், இலங்கையில் இன ஒழிப்புத் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையிலும் தாங்கள் இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யக் கோரவில்லை என்பதும், அளித்து வரும் ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்தவில்லை, ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ள படைக் கருவிகளையும் பயிற்சியாளர்களையும் திரும்பப் பெறவில்லை என்பதும், மாறாக இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போரை ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதாகச் சித்தரித்து இப்போர் தொடரும் என அறிவித்திருப்பதும் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிரான கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு, பாலஸ்தீன விடுதலையை, அங்கோலா நமீபிய விடுதலையை, ஏன் இந்தியத் துணைக் கண்டத்துக்குள்ளேயே பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேச விடுதலையை ஆதரித்த இந்திய அரசு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டும் ஆதரிக்க மறுப்பது ஏன், ஆதரிக்க மறுப்பதோடு மட்டுமல்ல, மாறாக, அப்போராட்டத்துக்கு எதிராகச் செயல் பட்டு தமிழின அழிப்புப் போரை நடத்தி வரும் சிங்கள அரசுக்கு உதவி வருகிறதே இந்த அளவுக்கு ஈழ மக்கள் செய்த பாவம்தான் என்ன என்கிற கேள்வியையும் உணர்வுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுப்பி வருகிறது.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 27, 2010

இந்தியாவின் ஒத்துழைப்பால்தான் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்தது; கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்














இந்திய அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பால்தான் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்ததாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சே நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘’விடுதலைப்புலிகளை முறியடிக்க 4 ஜனாதிபதிகள் தலைமையில் அமைந்த 8 அரசுகள் முயன்றன. ஆனால் முடியவில்லை. ராஜபக்சே பதவி ஏற்றதும் இது பற்றி ஆராயப்பட்டது.
 
முடிவில் ராணுவத்தின் பலத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பலன் கிடைத்தது. முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் கூடுதல் ராணுவ வீரர்களை நிலை நிறுத்தினோம்.
 
ஒவ்வொரு மாதமும் தலா 5 ஆயிரம் பேரை படையில் சேர்த்தோம். இதனால் மூன்றே வருடங்களில் வீரர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமானது.
 
இந்தியா உள்பட பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. எடுக்கப்படும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும்  உடனுக்குடன் இந்தியாவிடம் விளக்கப்பட்டன. போர் நடக்கும் சமயத்தில் இந்தியா மிகுந்த அழுத்தத்தையும் கொடுத்தது. அதை அதிபர் ராஜபக்சே சாதூரியமாக எதிர்கொண்டார்.
 
நான், பசில் ராஜபக்சே, வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியாவுடன் தினமும் பேசினோம். இந்தியாவின் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன் இருவரும் எங்களுக்கு ஒத்துழைத்தனர்.
 
முக்கிய விவகாரம் எழுந்த போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். இதனால் இலங்கை ராணுவத் தாக்குதல்கள் இடையூறு இல்லாமல் நடந்தன. இந்த ஒத்துழைப்பே விடுதலைப்புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

Monday, April 26, 2010

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு மாறியிருக்கும் : வைகோ














“நான் இப்போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் தமிழீழம் தொடர்பான இந்திய அரசின் முடிவு நிச்சயம் மாறியிருக்கும்” என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வைகோ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி மேலும் கருத்து தெரிவித்திருக்கும் வைகோ, “என் நண்பர்களான அத்வானி, வாஜ்பாய் இருவரும் வற்புறுத்தியும் இரண்டு முறைகளும் அமைச்சர் பதவி ஏற்க மறுத்துவிட்டேன். 2004 பாராளுமன்றத் தேர்தலில் பலரும் சொல்லியும் பிடிவாதமாக தேர்தலில் நிற்க மறுத்ததுதான், நான் செய்த மிகப் பெரும் தவறு என்பதை இப்போது உணர்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

அவர் மேலும் பேசும்போது, “ஆனால் எம்.பி. பதவி இல்லாமலேயே நான் 16 முறை பிரதமரைச் சந்தித்து தமிழீழம் தொடர்பாக மன்றாடினேன். இந்த நேரத்தில் நான் எம்.பி.யாக இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் அடிக்கடி இது தொடர்பாக பெரிய அளவில் விவாதங்களைக் கொண்டுவந்து அனைத்துத் தலைவர்களின் ஆதரவையும், திரட்டி சிங்கள அரசுக்கு ஆயுத பலத்தை இந்தியா கொடுப்பதைத் நிச்சயம் தடுத்திருப்பேன்.

1998-ல் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளானார்கள். அப்போது வாஜ்பாயிடம் பேசி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நான்தான் கூட்ட வைத்தேன். அக்கூட்டத்தில் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, முலாயம்சிங் யாதவ், நிதீஷ்குமார் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களும் பங்கேற்றார்கள்.

நான் பேச எழுந்தபோது விரைவில் என் பேச்சை முடிக்க விரும்பினேன். ஆனால் நிதிஷ்குமார், “இது பற்றி நீங்கள்தான் விரிவாகச் சொல்ல வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நான் அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசினேன். அந்தக் கூட்டத்தின் முடிவில்தான் “இலங்கைக்கு எந்த ஆயுதமும் விற்பதில்லை..” என்று பிரதமர் வாஜ்பாய் முடிவெடுத்தார். பிரதமர் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது.

தற்போது நான் எம்.பி.யாக இருந்திருந்தால் இது மாதிரியான தமிழீழத்திற்கான சேவையை என்னால் செய்திருக்க முடியும். ஆனால் கடந்த 2009 தேர்தலில் ஆளும்கட்சியினர் எனது தொகுதியில் மட்டும் 100 கோடி ரூபாய் செலவழித்து என்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் நான் எதையும் இழப்பு என்று நினைக்கவில்லை. என்னை மக்கள் எங்கு வைத்திருக்கிறார்களோ அங்கிருந்தே சேவை செய்வேன்..” என்றும் கூறியுள்ளார்.

Wednesday, April 21, 2010

பார்வதி அம்மாளின் வலியை புரிந்து கொள்ளாத கருணாநிதியும் மன்மோகனும்














86 வயதில் முதுகுத்தண்டு வலிக்கு இராமச்சந்திராவில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் , அனைத்திந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்ற 78 வயது இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கும் தெரியாதா முதுமையில் வரும் உடல் உபாதையின் வலியும், அந்நேரத்து மருத்துவத்தின் அவசியமும் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்துக்காக 80 வயது முதியவர் பார்வதியம்மாளை கொஞ்சமும் இரக்கமின்றி இந்த இருவரும் தலைமை ஏற்று இருக்கும் அரசுகளும் திருப்பியனுப்பியது எந்த விதத்தில் (அரசியல் லாபம் தவிர்த்து) நியாயம் என்று புரியவில்லை.

உங்களின் பார்வையில் பிரபாகரன் ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்றாலும் கூட, அவரை பெற்று எடுத்ததை தவிர பார்வதியம்மாள் என்ன தவறு செய்தார்? பிரபாகரன் பார்வதிய‌ம்மாளின் கருவில் இருந்தபோதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவைராகவா இருந்தார்? அல்லது இப்படி ஒரு இயக்கம் வரும் , அதற்கு தலைமை ஏற்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவே கருவுற்று பார்வதியம்மாள் பிரபாகரனை பெற்றெடுத்தாரா?

ராஜிவின் கொலை , தமிழீழ விடுதலைப் புலிகள் , பிரபாகரனின் தாயார், சோனியாவின் ஆசை, அரசியல் லாபம் என்பதெல்லாம் விடுங்கள். ஒரு 80 வயது முதியவர், இராணுவ முகாமில் அடைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர், கணவனை இழந்து வாடுபவர், உடலாலும் , உள்ளத்தாலும் சோர்ந்து போனவர் என்ற ஏதாவது காரணத்தை பார்த்தாவது அந்த அம்மையாருக்கு இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கலாமே, நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருந்திருந்தால்.

உங்கள் பார்வையில் தவறு செய்தவர் குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் மன்னிப்பு கிடையாது, உதவி கிடையாது என்றால், இன்றைய அரசியல்வாதிகளில் 99 % பேரின் குடும்ப உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்தப்பட்சம் மாநிலமாவது கடத்தப்பட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கவேண்டும். ஒரு பிரதமரை கொன்ற தவறை காட்டிலும், பல இலட்சம் மக்களை தினம் தினம் ஏதாவது ஒரு விதத்தில் அணு அணுவாக கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் தவறு எந்த வகையில் சிறியது ?

86 வயதிலும் உங்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி இருக்கிறோமே கலைஞர் அவர்களே, உங்கள் மேல் பல விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், உங்களின் பல செய்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும், உங்களை நடு இரவில் கைது செய்த போது எங்கள் மனம் பதைத்த‌தே, அரசியல் ரீதியாக உங்களை கடுமையாக எதிர்த்த பலரும் அப்போது உங்கள் பக்கம் நின்றது நிச்சயம் உங்கள் நினைவில் இருக்கும். உங்களின் நினைவாற்றலை அறிந்தவர்கள் நாங்கள். நீங்கள் உடல்நலமின்றி பெரிய மருத்துவமனைகளில் படுத்த போதும் கூட நீங்கள் உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று தானே நினைத்தோம். அப்போதெல்லாம் சொல்லப்பட்ட வாக்கியம் என்ன தெரியுமா ? "என்ன இருந்தாலும் பாவம் அந்த‌ வயது தாண்டிய முதியவர்.. " .

அரசியலில், ஆட்சியில் தவறு செய்தவர் என்ற போதிலும், உங்களுக்காக ஏன் எங்கள் மனம் பதைத்தது? மனிதாபிமானம் தானே காரணம். முதியர் ஒருவர் இப்படி அலைக்கழிக்க படுகின்றாரே என்ற வருத்தம் தானே காரணம்? அந்த பதைபதைப்பு உங்களுக்கு இப்போது இருக்க வேண்டாமா?

சரி, நீங்கள் திருப்பியனுப்பவில்லை. நம்புகிறோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது.. இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுக்கு தகவல் தரவேண்டியதில்லை என்பதெல்லாம் சரி. ஆனாலும் உளவுத்துறையின் மூலம் ஒரு மாநில முதல்வருக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவேளை நீங்கள் சொல்வது போல , இந்த விஷயமே உங்களுக்கு மறுநாள் பத்திரிகை பார்த்து தான் தெரிந்தது என்றால், உளவுத்துறையில் இருக்கும் ஓட்டையை அடைக்கும் வேலையை முதலில் பாருங்கள்.

தேர்தல் நேரத்தில் இதைவிட பெரிய பிரச்சனையை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்..

அவர் வருவதும் , திருப்பி அனுப்பபடுகிறார் என்பதும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நீங்கள் மௌனம் காத்திருக்க / அல்லது அமைச்சர் பதவிக்கு கொடுத்ததை போன்ற அழுத்தத்தை மத்திய அரசுக்கு தராமல் விட்டிருக்கவேண்டும்.

காரணம் 1. சோனியா , மத்திய அரசுடனான கூட்டு, தமிழக காங்கிரஸ் ஆதரவு

காரணம் 2. அந்த அம்மையார் வர ஏற்பாடுகள் செய்தது வைகோவும் , பழ நெடுமாறனும்

இந்த காரணங்களுக்காக மௌனம் சாதித்துவிட்டு பின்னர் சமாளித்து ஆகவேண்டுமே என்று , இரவு தான் தெரியும் , காலை தான் தெரியும் என்று அறிக்கை வாசிக்கின்றீர்கள் என்பது தெளிவாகவே புரிகிறது கலைஞரே.

இப்போதும் கெட்டுவிடவில்லை . அவர் கோரிக்கை வைத்தால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சட்டசபையில் சொல்லியதும், டி ஆர் பாலு அவர்களை பாராளுமன்றத்தில் பேச வைத்தது மட்டும் போதாது. நீங்களும் ஒரு முதியவர் என்ற வகையில் அவரின் வலியை உணருங்கள். அவர் கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்கலாம், ஆனால் அவரின் பக்கவாதம் காத்திருக்காது. உங்களின் இரவு கைதின் போது தங்கள் கண்டனங்களை தெரிவித்தவர்கள் உங்களின் கோரிக்கைக்கு காத்திருந்தார்களா?

2003 ல் முதல்வராக இருந்த அம்மையார் செய்துவிட்டு போன ஒரு தவறை திருத்தும் வாய்ப்பு இது. மத்திய அரசுக்கு நீங்களே கோரிக்கை விடுங்கள். 2009 ல் போரை நிறுத்துங்கள் என்று விளையாட்டு பிள்ளையாக வைத்த கோரிக்கையாக அல்லாமல், தி மு க விற்கு இன்னுமொரு மத்திய அமைச்சர் பதவி தரும் வாய்ப்பிருந்தால் , அதற்கு எப்படி , எந்த விதத்தில் , எவ்வளவு அழுத்தமாக "கோரிக்கை" வைப்பீர்களோ அதுபோல வையுங்கள். அந்த அம்மையாரின் பெயரை மட்டுமாவது முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய "ப்லாக் லிஸ்ட்" ல் இருந்து எடுத்திட வையுங்கள். குறைந்த பட்சம் இந்த சிகிச்சைக்காக மட்டும் பார்வதியம்மாள் வந்து போக அனுமதி வாங்கி கொடுங்கள்.

உங்களின் 1 ரூ அரிசியை விட, வண்ண தொலைகாட்சியை விட, காப்பிட்டு திட்டத்தை விட, இந்த விஷயத்தில் நீங்கள் வாங்கி தரும் அனுமதி எங்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கும், பல காலம் உங்கள் பெயரை சொல்லும்.