Thursday, May 6, 2010

ஒரு சாமானியத் தமிழனின் மனம் திறந்த மடல்













இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் கொடுந்தாக்குதல்களுக்கு ஆளாகி ஈழத் தமிழ் மக்கள் கடந்த பல்லாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களையும் எதிர்கொண்டு வரும் இன்னல்களையும் நாடறியும். தாங்களும் அறிவீர்கள்.

தமிழகத்தில் இச்சிக்கல் குறித்து அக்கறையுடைய அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வப்போது நடத்திய போராட்டங்கள், அனுப்பிய கடிதங்கள், மனுக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக சட்டமன்றமே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு மனதோடு நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களும் தங்களின் மேலான பார்வைக்கு வந்திருக்கும் என நம்புகிறோம்.

எனினும், இலங்கையில் இன ஒழிப்புத் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையிலும் தாங்கள் இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யக் கோரவில்லை என்பதும், அளித்து வரும் ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்தவில்லை, ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ள படைக் கருவிகளையும் பயிற்சியாளர்களையும் திரும்பப் பெறவில்லை என்பதும், மாறாக இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போரை ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதாகச் சித்தரித்து இப்போர் தொடரும் என அறிவித்திருப்பதும் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிரான கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு, பாலஸ்தீன விடுதலையை, அங்கோலா நமீபிய விடுதலையை, ஏன் இந்தியத் துணைக் கண்டத்துக்குள்ளேயே பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேச விடுதலையை ஆதரித்த இந்திய அரசு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டும் ஆதரிக்க மறுப்பது ஏன், ஆதரிக்க மறுப்பதோடு மட்டுமல்ல, மாறாக, அப்போராட்டத்துக்கு எதிராகச் செயல் பட்டு தமிழின அழிப்புப் போரை நடத்தி வரும் சிங்கள அரசுக்கு உதவி வருகிறதே இந்த அளவுக்கு ஈழ மக்கள் செய்த பாவம்தான் என்ன என்கிற கேள்வியையும் உணர்வுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுப்பி வருகிறது.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment