Monday, May 31, 2010

நாளைய ஈழமும் இந்திய வல்லரசும்













ஓராண்டு கடந்துவிட்டது... வன்னியில் எழுதப்பட்ட நம் வீரவரலாறு ரத்தம் தோய்ந்த ஈழமண் கூப்பிடும் தூரத்தில்தான் கேட்டது மரண ஓலம். உயிரை ஆயுதமாக்கிய முத்துக்குமரன்களின் இறுதியாத்திரை இந்திய அரசியலில் ஒரு துரும்பையும் அசைக்கமுடியவில்லை. வாசனைத் தைலமிட்டு சீவிச்சிங்காரித்து மலர்ச்சூடி மனிதனின் தலையில் இருப்பதால் அதுக்கு கூட மதிப்புண்டு கேட்டுபாருங்கள் கோவிலுண்டியலில் பணமாக மாறும் அதன் வித்தையை! சே என்னடா இது தமிழன் அதுவாகக் கூட இல்லையே என்று எவனுக்கும் வருத்தமில்லை.

இந்தியத்தமிழன்

ஈழத்தமிழர்கள் குறித்து போட்டிப்போட்டுக்கொண்டு அறிக்கை யுத்தங்கள் நடத்திய நம் அரசியல் தலைவர்கள், அவர்களுக்குஎந்த வகையிலும் குறையாமல் உலகத் தமிழர்கள் அனுப்பிய விசாவில் உலகமெல்லாம் சுற்றிவரும் நம் தமிழினத் தலைவர்கள்,.. அடிக்கடி எங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது நாங்களும் தமிழர்கள்தான் என்று தமிழ் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்த கூடிக் கலைந்து மீண்டும் கூடிக் கலைந்து... நேரடியாக வீரவசனங்களை உதிர்த்து கலைகின்ற நம் திரைப்பட வெள்ளித்திரை சின்னத்திரை நாயக நாயகியர் கவிஞர்கள் குழாம் இயக்குநர் சிகரங்கள் வரிசை, ஒப்பாரிக்கவிதைகள் பாடி அரித்துக்கொண்டிருக்கும் மன உணர்வுகளைச் சொரிந்துக் கொண்டு யாருக்குச் சொரிந்துவிட்டால் யாருக்கு லாபம் ? என்ற கணக்கில் குழுச்சண்டைகளைத் தொடரும் மேன்மைமிகு இலக்கிய அறிவுஜீவிகள் இப்படியாக ஈழப்போராட்டத்தில் இன்று வெளிப்படையாகத் தெரியும் எவராலும் ஈழமக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பது மிகவும் வெளிப்படையான உண்மை.

இலவசங்களில் தமிழன் சோரம்போகி ஆண்டுகள் பலவாகிவிட்டது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment