Thursday, May 13, 2010
தமிழ் நாட்டின் தமிழ்ச் சொந்தங்களே! எங்கள் கையை கொஞ்சம் பற்றிக்கொள்ளுவீர்களா?
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதி அம்மா அவர்கள் 10,05,2010, திங்கள் மலேசியாவிலிருந்து திரும்பி இலங்கை சென்று சேர்ந்திருக்கிறார்கள்.
16,04,2010, மலேசியாவிலிருந்து இந்திய தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு, வைத்தியத்தின் நிமித்தமும் எங்கள் சொந்தங்கள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையுடனும் வந்து விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது, சட்டவிரோதமாக உங்கள் நாட்டின் காவல்த்துறையினர் அம்மாவை கீழே இறங்க அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பியிருந்தனர்.
அது பற்றி அரசியல் மட்டங்களிலிருந்தும், ஊடகங்களின் பார்வையிலும், மக்கள் கருத்துக்களாகவும் பல கண்டனங்களும் வெளிவந்துள்ளன. அவைகளில் "தமிழகத்து உறவுகளான" உங்களின் அப்பழுக்கற்ற காட்டமான பல குமுறல்கள் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகி எங்களை ஆற்றி, மனம் நெகிழவைத்ததுடன் முடிவுக்கு வந்திருந்தது.
ஊடகங்களில் எழுதுவதற்கு எமது சமூகம் சார்ந்த ஆக்கபூர்வமான பல்வேறு தேவைகள் நிறையவே எனக்கு இருந்தும் நடந்து முடிந்த அந்த கசப்பான விடயத்தை திரும்பத் திரும்ப தூசி தட்டிக்கொண்டிருப்பது தேவையில்லை என்றும் எரிச்சலடைய வைக்கிறது.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment