Thursday, May 13, 2010

உண்மையிலேயே சபிக்கப்பட்ட இனமா ஈழத்தமிழினம்?













அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈழத்தமிழ் மக்களின் படகு ஒன்று பழுதடைந்ததால் அதில் இருந்த 5 தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அவுஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற ஈழத் தமிழ் மக்களின் அகதிகள் படகு ஒன்று கடந்த வாரம் நடுக்கடலில் பழுதடைந்திருந்தது. அதனை தொடர்ந்து அதில் இருந்து கடலில் குதித்த ஐந்து தமிழர்களை தேடிக் கண்டறிவதற்கு அவுஸ்திரேலியா படையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவை கைவிடப்பட்டுள்ளன.

15 சிறுவர்கள் உட்பட 60 பேர் பயணம் செய்த படகில் அவர்கள் பயணித்திருந்தனர். அவர்களின் படகு கொக்கொஸ் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டது. இயந்திரம் பழுதடைந்ததால் அங்கு தத்தளித்த அந்த படகில் இருந்து உயிர்க்காப்பு அங்கிகளை அணிந்த ஐந்து தமிழ் மக்கள் உதவி கோரி கடலில் குதித்ததாக படகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment