Sunday, April 25, 2010

கோப்பை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்














மும்பையில் நடந்த பரபரப்பான மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.பி.எல்.,லில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தோனி பெற்றார்.இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., `டுவென்டி-20` தொடர் நடந்தது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

சச்சின் பங்கேற்பு: வலது கை விரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது மும்பை கேப்டன் சச்சின் பங்கேற்றார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி எதிர்பார்த்தது போல பேட்டிங் தேர்வு செய்தார்.

மந்தமான துவக்கம்: சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் இணைந்து மந்தமான துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஹைடன் திணற, 4 ரன் தான் எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரில் மலிங்கா 2 ரன் தான் கொடுத்தார். பின் ஹர்பஜன் பந்தில் ஹைடன் ஒரு சிக்சர் அடித்து நிம்மதி தேடினார். மறுபக்கம் ஜாகிர் பந்தில் முரளி விஜய் ஒரு சிக்சர் அடித்தார். பெர்ணான்டோ வேகத்தில் விஜய்(26) அவுட்டானார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் ஹைடன்(17) வீழ்ந்தார். பெர்ணான்டோ பந்தில் பத்ரிநாத் தும்(14) அவுட்டாக, சென்னை அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அதிவேக அரைசதம்: இதற்கு பின் தோனி, சுரேஷ் ரெய்னா இணைந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் ரன் மழை பொழிந்தனர். மும்பை அணி மோசமாக பீல்டிங் செய்ய, இரு முறை கண்டம் தப்பிய ரெய்னா கலக்கினார். ஜாகிர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் போலார்டு ஓவரில் 2 சூப்பர் சிக்சர் விளாசிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 9வது அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்த இவர், ஐ.பி.எல்., பைனல்களில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். தோனி 22 ரன்களுக்கு ஜாகிர் பந்தில் வெளியேறினார். மார்கல் 15 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., பைனல்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ரெய்னா 57 (3 பவுண்டரி, 3 சிக்சர்), அனிருதா ஸ்ரீகாந்த் 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

மும்பை தோல்வி : இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் துவக்க வீரர்களாக டெண்டுல்கர் மற்றும் தவானும் களமிறங்கினர். தவான் ரன் ஏதும் எடுக்காமல் போலீங்கர் பந்தில் அவுட்டானார். நாயர் 27 ரன்களுக்கு அவுட்டானார். சச்சின் 49 ரன்களுக்கும் ராய்டு 20 ரன்களுக்கும், போலார்டு 27 ரன்களுக்கும் அவுட்டாயினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடை ந்தது

முதல் இந்தியர் : பைனலில் சென்னை அணி வெற்றி பெற்றதன்மூலம், ஐ.பி.எல்., கோப்பை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்ன் (2008, ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (2009, டெக்கான்) கோப்பை வென்றனர்.

1 comment:

  1. it look like a gambling game?polaarad was a good bats man and why he was given only the last 3 overs to bat???and we noticed that polaaard was not given a good co operation during his 3 over batting?why?some memebers have joined hands with some betters(gamblers) who bet huge amount of money for the winning team?god knows

    ReplyDelete