Saturday, July 10, 2010

'தலைவன் இருக்கிறானா…? நமக்கெல்லாம் தெரியாத விடை உலகுக்குத் தெரியுமப்பா!' : சீமான்














ஐநா விசாரணைக் குழு, இலங்கைத் தமிழரின் இன்றைய நிலை, சீனாவால் உருவாகியுள்ள ஆபத்து, தலைவர் பிரபாகரன் பற்றியெல்லாம் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் இயக்குநர் சீமான் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டி:

முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.

இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க… அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க… ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க… இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம்.

“இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க செய்திதானே?”

“எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங்கையும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குல மாக நகர்த்திக்கொண்டு போய் கடலம்மாவின் காலடியில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டாளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!”

முழுமையான பேட்டியைப் படிக்க...

No comments:

Post a Comment