Thursday, July 8, 2010

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது















கரும்புலிகள் என்பது தற்கொடைப்பிரிவைச்  சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப்  புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை  முன்னெடுக்கும் எல்லோருமே தன்னுடைய  அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு  எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சயனைட்  குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு  இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில்  எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை  பாதிப்படைய விடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள்  எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.

எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

No comments:

Post a Comment