Friday, July 2, 2010

யார் விரும்பினா​லும் அரசிய​லுக்கு வர​லாம்...​ கருணாசின் கலக்கல் பேட்டி














மேடைப் பாடகர், பின்ன​ணிப் பாடகர், இசைய​மைப்பாளர், நகைச்​சுவை நடிகர், விநியோகஸ்தர், கதாநாயகன் எனப் பல்​வேறு பரிமாணங்களை வெளிப்ப​டுத்​திய கருணா​ஸின் தற்போ​தைய அவதாரம் -  தயா​ ரிப்பாளர்.
 
"திண்​டுக்கல் சாரதி` வெற்​றிப் படத்​துக்​குப் பிறகு அவர் கதாநாயக​னாக நடிக்​கும் "அம்பாச​முத்திரம் அம்​பானி` படத்தை அவரே தயா​ரிக்கி​றார். படத்​தின் ரிலீஸ் வேலைக​ளில் மும்முர​மாக இருந்த கருணாஸச் சந்​தித்த​போது... பரபரப்பு ஏது​மின்றி இயல்பாகப் பேசி​னார். இனி கரு​ணாஸ்...

இன்​றைய சினி​மாத்​துறை இருக்​கும் சூழ்நிலை​யில் பல பெரிய தயா​ரிப்பாளர்களே படம் எடுக்கத் தயங்​கும்​போது நீங்கள் எப்படி தயா​ரிப்​புத் துறைக்கு வந்​தீர்கள்?

கதை ​யின் மீது இருந்த நம்​பிக்கை​தான். "திண்​டுக்கல் சாரதி` படத்​துக்​குப் பிறகு 15 கதைகள் கேட்டு இந்தக் கதை​யைத் தேர்ந்தெ​டுத்​தேன். இதை என் படங்க​ளுக்கு காமெடி டிராக் எழு​தும் ராம்​நாத்.பி இயக்குகி​றார். ஒரு சாமானியன் உழைப்​பால் பெரிய மனிதனாவது​தான் கதை. கிட்டத்தட்ட என்னு​டைய வாழ்க்கையை​யும் கதை பிர​திப​லித்த​தால் தைரியமாகப் படத்​தைத் தயா​ரித்​துள்​ளேன்.

பதி​னைந்து வருடங்க​ளுக்கு முன்பு சென்​னைக்கு வந்த​போது... மோட்​டார் பைக்கி​லும் கார்களி​லும் மக்கள், நின்று பேசக் கூட நேர​மில்​லாமல் பரபரப்பாகச் சென்று​கொண்டி​ருக்கி​றார்களே - இவர்கள் எங்கு செல்கி​றார்கள்? என்ன செய்​வார்கள்? என அதிசயமாக​வும் அதிர்ச்சியாக​வும் பார்த்​தேன். அப்ப​டிப்பட்ட நான் இன்று இதே ஊரில் ஒரு தயா​ரிப்பாளர் ஆகி​விட்​டேன் என்று ​நினைக்​கும்​போது ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட்​டுள்ள​தாக உணர்கி​றேன்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

No comments:

Post a Comment