Saturday, July 31, 2010

மலேசியாவில் ரஜினி!


எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மலேசியா விமானநிலையத்தில் இறங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவும் வந்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் மலேசியா வந்துள்ளார்.

இந்திய திரை வரலாறு காணாத பிரமாண்ட முறையில் எந்திரன் இசை இன்று இரவு மலேசியாவில் வெளியாகிறது. இதில் பல இந்திய திரைப் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

ரஜினியின் வருகை மலேசிய தமிழ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் பெரும் விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளன. மலேசியாவில் எந்திரன் ஆடியோ உரிமையை லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

தமிழ் நாளிதழ்கள் இந்த நிகழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளன. மக்கள் ஓசை நாளிதழில் ரஜினியின் வருகைதான் முதல்பக்கச் செய்தி.

மேலும் சினிமா செய்திகளுக்கு..

No comments:

Post a Comment