Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts

Saturday, May 8, 2010

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் மரணமும்












ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் 80 ஆவது வயதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி. இந்த எதிர்ப்புகளுக்கு முன் வைக்கப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை!

ஈழ விடுதலைப் போராட்டத்தையே ராணுவத்தால் ஒடுக்கிட அனைத்து உதவிகளையும் செய்தது சோனியா, மன்மோகன் ஆட்சி! காரணம் என்ன சொல்லப்பட்டது? அதே ராஜீவ் சாவுதான்! 19 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகும் நளினியை விடுதலை செய்யக் கூடாது. அவர் மரணத்தை சந்திக்கும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி சோனியா வட்டாரமும், தமிழக போலி கதர்ச்சட்டை ‘கனபாடிகளும்’ கூப்பாடு போடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி அதற்கு தண்டனிட்டு பணிந்து போய் கிடக்கிறது. சொல்லப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதுதான்!

ராஜீவ் கொலை 1991 ஆம் ஆண்டு நடந்தது. 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ராஜீவ் ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம், அங்கே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது. ராஜீவ் அனுப்பிய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் ராஜீவ் உயிரைப் போல் முக்கியமானதுதான். ராஜீவ் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி சோனியா, இந்தியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டார். ராஜீவின் மகனை அடுத்த பிரதமர் பதவிக்கு தயார் செய்து வருகிறார்.

ராஜீவ் கால காங்கிரசில்கூட அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அணிகள் இருந்தது உண்டு. சோனியாவோ ராஜீவையும் மிஞ்சி தனது கட்சியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அமைச்சரவை முடிவுகள் ஏதுமின்றியே தன்னிச்சையாக தனது ஆணைக்குட்பட்ட ‘மலையாள அதிகாரக் கும்பல்’ ஒன்றை அமைத்துக் கொண்டு, அதன் வழியாக ஈழத்தில் இனப்படுகொலைகளுக்கு திட்டம் தீட்டித் தந்து ஒரு விடுதலைப் போராட்டத்தையே சீரழித்து விட்டார். கேட்டால் ராஜீவ் கொலை செய்யப்பட்டாரே என்று கூறுகிறார்கள்.

ஆனால், இதே காங்கிரஸ் ஆட்சியில், போபாலில் என்ன நடந்தது? யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பல்லாயிரம் மக்கள் பிணமானார்களே; லட்சக்கணக்கான மக்கள் உடல் ஊனமானார்களே; அவர்களின் கதி என்ன? ராஜீவ் உயிருக்காக மட்டும் குடம் குடமாக 20 ஆண்டுகளாக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட அந்த ஏழை எளிய மக்களுக்கு, 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகாவது நிவாரண உதவிகளைப் பெற்றுத் தந்ததா? ராஜீவ் உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனித உயிர்கள் எல்லாம் இவர்களுக்கு மயிருக்குச் சமமா? மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 7, 2010

ராஜீவ் கொலை - நளினி விடுதலை - தடை என்ன?













ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.

நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.

விரிவாகப் பார்ப்போம். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 5, 2010

சோனியாவுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நளினியை விடுதலை செய்யத் தயார்; முதல்வர் கருணாநிதி கொடுத்த உறுதிமொழி













ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 19 வருடங்களாகச் சிறையில் இருந்துவரும் நளினியை விடுதலை செய்வதில் சோனியாவுக்கு ஆட்சேபணையில்லையென்றால் தான் அவரை விடுதலை செய்யத் தயார் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன்பாகத் தன்னிடம் தெரிவித்ததாக பிரபல கவிஞரும், சினிமா பாடல் ஆசிரியருமான தாமரை கூறியுள்ளார்.

நளினியின் விடுதலையில் இருப்பது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா? என்கிற தலைப்பில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசும்போது தாமரை இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தியிருக்கிறார் கவிஞர் தாமரை. நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்கிற அந்த விண்ணப்பத்தில் கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, கவிஞர் பா.விஜய், கவிஞர் கனிமொழி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும், சமூக சேவகர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்..

பலரும் கையெழுத்திட்டிருந்த அந்தக் கையெழுத்துப் பிரதியை தான் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து கொடுத்தபோது “நளினியை விடுதலை செய்ய சோனியாவுக்கு ஆட்சேபணையில்லை என்றால், எனக்கும் ஆட்சேபணையில்லை.. விடுதலை செய்துவிடலாம்..” என்று கலைஞர் சொன்னதாக தாமரை தெரிவித்தார்.

ஆனாலும் மாநிலச் சிறைகளில் இருக்கும் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு என்பதால் கருணாநிதியே இதில் ஒரு முடிவெடுக்கலாம் என்று தான் வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார் தாமரை.

“இப்போது நளினிக்கு விடுதலை இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை பார்க்கும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக சோனியா காந்திக்கு இதில் விருப்பமில்லை என்பதாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது. சோனியாவை கேட்டு ஆட்சி நடத்தும் அளவுக்கு கருணாநிதிக்கு அப்படியென்ன நிர்ப்பந்தம்..? இது தமிழ் இனத்திற்கு அவர் செய்யும் துரோகம் இல்லையா..?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் தாமரை.