Tuesday, June 1, 2010

எப்படி இருக்கிறார் பிரபாகரனின் தாயார்? மருத்துவர் மயிலேறும்பெருமாள் பேட்டி..!













சென்னையில் சிகிச்சைக்கு அனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் இப்போது எப்படி இருக்கிறார்? என்பதையறிய வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். “தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சையளிக்கிறார்” என அவர்கள் சொல்ல.. வேகமாகவே மேலே விசாரித்தோம்.

பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். 1965-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். 1972-ம் ஆண்டுவரை பயிற்சி மருத்துவராகத் தமிழகத்தில் பணியாற்றிவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பல போராளி இயக்கங்கள், தங்கள் வீரர்களின் சிகிச்சைக்காக இவரை அடிக்கடி கடத்திக் கொண்டு போனதுண்டு. ஒவ்வொரு முறை இவர் கடத்தப்பட்டுத் திரும்பி வரும்போதும் சிங்கள ராணுவத்தினர் வந்து இவரிடம் விசாரணை நடத்திச் செல்வதும் நடந்தது.

ஆகவே மயிலேறும்பெருமாள் 86-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குச் சென்றுவிட்டார். பிறகு 92-ல்தான் இலங்கை திரும்பி வன்னியில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது கிளிநொச்சி அரசு அதிபர் இவரை அரசு வேலைக்கு அழைக்க இன்றுவரை இலங்கை அரசு மருத்துவராகப் பணியில் தொடர்கிறார்.

மயிலேறும் பெருமாளைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment