Showing posts with label பிரிகேடியர். Show all posts
Showing posts with label பிரிகேடியர். Show all posts

Thursday, May 20, 2010

பிரிகேடியர் சொர்ணம்













(சூசைப்பிள்ளை ஜோசப் அன்ரனிதாஸ்,
திருகோணமலை,
08.04.1964 - 15.05.2009)

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த‌ ஜோசப் தம்பதிகளின் இரண்டாவது மகவாக 1964ம் ஆண்டு பிறந்தார் அன்ரனிதாஸ். ஆனால் அன்ரனிதாஸின் மூதாதையர்கள் யாழ் மாவட்டம் மானிப்பாயிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.

பிறப்பால் கிறித்தவராக இருந்தபோதும் சிறு வயது அன்ரனிதாஸுக்கு முற்போக்கு சிந்தனைகள் அதிகம். ஜாதியும் மதமும் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்காக பயன்படுகிறதே என்று வருத்தப்படுவதுண்டாம் அவர்.

திருகோணமலையில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது கண்டு கொதித்துப் போயிருந்தார் இளைஞனாகவிருந்த அவர். புலிகள் இயக்கத்தில் சேர‌ விரும்பினார் ஆனாலும் குடும்ப நிலமை தடுத்தது.தகுந்த சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்த அவருக்கு 1983ல் இடம்பெற்ற இனக்கலவரம் நல்ல சாக்காக அமைந்தது. அவ்வளவுதான் குடும்ப பந்தங்களை அறுத்தெரிந்து புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று













பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.

தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற‌வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்