Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, May 15, 2010

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்













செல்லரித்துப்போய் இருண்டு கிடக்கின்ற
என் வீட்டு முற்றத்தில்.
காட்டுப்பன்றிகளும் கரடிகளும்
இனந்தெரியாத வேறு பல விலங்குகளும்
மேச்சல் காடாக்கி
மலம் சலம் கழித்துக்கொண்டிருக்கின்றன,

என் உணவுக்கான ஆதாரங்கள்
அவைகளின் ஆக்கிரமிப்பால்
காலடிகளில் மிதிபட்டு
அழிந்து போகின்றன,

நேற்றுவரை
நீ எங்களோடு எங்களில் ஒருவனாக
பாதுகாவலனாக ஒன்றிக்கிடந்த தருணத்தில்
என் குழந்தைகள்
முற்றத்தில் விழையாடிக்கொண்டிருந்தபோது
ஒன்றிரண்டு காகங்கள் மட்டுமே
எச்சம் போட முடிந்தது,

அது கூட அவமானமென
அவ்வளவு கோபப்பட்ட நீ,
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 11, 2010

செத்த தாய் முலை கொடுத்தாள்













விண்முட்ட விஞ்ஞானம்
வினைத்திறனாய் ஆராய்ச்சி
கண் மாற்ற கால் மாற்ற
கலர் மாற்ற- தலை
மயிர்மாற்ற
கணக்கில்லா பெரு சிகிச்சை.

புல்லுக்கு வயதென்ன
பூண்டுக்கும் உயிர் உண்டோ
நத்தைக்கும் எறும்புக்கும்
சித்தங்கலங்காமல்
மெத்தப்படித்த பலர்
சுற்றி நின்று நடைப்பயிற்சி,
நில்லாமல் நெடு வழியும்
நீண்ட நேய மனம்.
நல்லோர் புதிய யுகம்
நாம் காண்போம் என்று குரல்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை, மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 6, 2010

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வங்கக் கடல் மீது

தங்கத் தமிழ் மகனை

சிங்களத்து வெறிநாய்

சங்கறுத்துக் கொல்கிறது

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வலைவீசி மீன்பிடிக்க

அலைமீது சென்றவனின்

தலைமீது குண்டுவீசும்

கொலைச் செயலும் நடக்கிறது.

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?



நாவாய் படைநடத்தி

நாடுகளை வென்ற இனம்

நாள்தோறும் அகதிகளாய்

நாடிழந்து வருகிறது.

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

ஆடையை உலகுக்கு

அறிமுகம் செய்தவனை

ஆடையவிழ்த்து அம்மணமாய்

அடித்து சுட்டுக் கொல்கிறான்

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?



-சிப்பிக்குள் முத்து, கடையநல்லூர்