Showing posts with label ஈழத் தமிழர். Show all posts
Showing posts with label ஈழத் தமிழர். Show all posts

Sunday, June 6, 2010

ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம்















ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது.

கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே விட்டுவிட்டு, செய்தியை மட்டும் செய்தியாகவே உலகம் கை கழுவிக்கொண்டிருக்கிறது. தமிழனின் இன்றைய செய்தி நாளை மறக்கப்படுகிறது, அல்லது மறக்கடிக்கப்படுகிறது. நாளை வேறு ஒரு செய்தி பெரிதாகி முந்தய செய்தி அதற்குள் புதைந்து மறைந்து விடுகிறது, இதுதான் ஈழத்தமிழனின் யதார்த்த வாழ்க்கை நிலை.

இந்த நிலை தொடருமானால் பாழாய்ப்போன தமிழனின் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும், இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமாயின் உலகம் காரணத்தை ஆராய்ந்து மனிதாபிமானமான நீதியான தீர்வின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்தாலும் எவரும் ஒற்றுமையுடன் அதை தீர்த்து வைப்பதற்கான முனைப்பை இதுவரை காட்டி நிற்கவில்லை, ஈழப்பிரச்சினையை எவராவது தீர்த்து வைக்காத பட்சத்தில் அது விபரீதமான ஒரு முடிவை நோக்கிச் சென்று தானாக ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 25, 2010

மீதித் தமிழனும் மெள்ளச் சாவான்! – இதயத்தைப் பிளக்கும் ஈழத் தமிழரின் இன்றைய நிலை













முள்ளிவாய்க்கால் பயங்கரம் முடிந்து ஓராண்டான பிறகும் கூட, வடக்கு இலங்கையின் முல்லைத் தீவு பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க மறுத்து வருகிறது இலங்கை. இன்று பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் இந்தப் பகுதிகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று வெளியுலகுக்கு வேஷம் போட்டு வருகிறது சிங்கள அரசு.

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்களின் மனதை அறுக்கும் இந்தக் கேள்விக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தந்துள்ள விளக்கமான பதிலை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது.

அவரது பேட்டியை முழுமையாக இங்கே தருகிறோம்:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்