
நேற்று கணேசபுரத்தில் மலக்குழி ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட உடலங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த போது கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாக உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இவ் உடலங்கள் காணப்படுகின்றன.
கிளிநொச்சி நகரில் உள்ள கந்தசாமி கோவிலுக்கு முன்வீதியில் உள்ள வீட்டு வளவிற்குள் உள்ள மலசலகூடத்துக்கு அருகாமையில் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மலக்குழியினை துப்புரவு செய்ய முற்பட்டவேளை சந்தேகத்துக்கிடமாக மணல் பரவப்பட்டு அது நிரவப்பட்டிருந்த மணலினை வெளியெடுத்திருக்கின்றனர்.
4 முதல் 5 அடி ஆழத்தில் கிண்டியபோது, குறித்த குழியினுள் கறுத்தப் பைகளால் முடிக்கட்டப்பட்ட நிலையில் பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது துர்நாற்றத்துடன் பெண்களின் உடலங்கள் காணப்பட்டிருக்கின்றன.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்