
`புலி ஆதரவாளர்கள் சிலர் எமது அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்`
இந்த வார்த்தையைக்கூறி வருந்தியிருப்பவர் வேறு யாரும் அல்ல சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவேதான். மகிந்தவின் இந்த வருத்தத்தினை ஏன் வரிந்து கட்டி இழுக்கிறேன் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. நேரடியாக விடயத்திற்கே வருகிறேன்.
வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள அரசு படுகொலை செய்து கொண்டிருந்த காலத்திலும் அதற்கெதிராக புலம்பெயர் நாடுகளில் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்த காலத்திலும் மகிந்தர் இந்த கருத்தை இவ்வளவு மனம் நொந்து தெரிவிக்கவில்லை. ஆனால் அப்போது இல்லாத அழுத்தம் இப்போது வந்திருப்பதாக அவர் கூறுவதே இக்கட்டுரையின் ஆய்வுமையம்.
அதாவது சந்தர்ப்பம் பார்த்து இந்தியாவின் திரை உலகத்தையே ஒரு சில சிறிய இயக்கங்களும் (நாம் தமிழர் இயக்கம், மே 17 இயக்கம்) சில உணர்வாளர்களும் தமிழ்த் திரையுலகமும் முடக்கி அதன்மூலம் மகிந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றால் மத்திய அரசில் பலம் கொண்ட தமிழ்நாட்டு அரசால் அப்போது ஏன் அது முடியாமல் போனது?
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்