Showing posts with label வன்னி மக்கள். Show all posts
Showing posts with label வன்னி மக்கள். Show all posts

Saturday, June 5, 2010

தென்னிந்திய திரைப்படத் துறையினருக்கு வன்னி மக்களின் நன்றிகள்















ஈழத்தமிழ் மக்களின் இழப்பினை புரிந்த தென்னிந்திய திரைப்படதுறையினருக்கு வன்னி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளார்கள்.

வன்னியில் இனப்படுகொலையினை நடத்தி ஓராண்டைக் கடந்துள்ள நாட்களில் வன்னி மக்கள் இழப்பில் இருந்து மீழெளாத நிலையில் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் கூத்து கும்மாளங்கள் நடத்துகின்ற‌து சிறீலங்காஅரசு.

வன்னியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டும் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுமுள்ள நிலையில், தமிழ் மக்களின் வாழ்வு நிம்மதி அற்ற வாழ்வாக காணப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் பன்நாட்டு இந்திய திரைப்படவிழா நடைபெறுகின்றது.

இதில் தமிழ் மக்களின் உணர்வினை புரிந்துகொண்ட தென்னிந்திய திரைப்படதுறையினர் கலந்து கொள்ளாமையினை நாங்கள் நன்றியுடன் பற்றி நிக்கின்றோம். வன்னியில் தமிழ் மக்கள் தமது வேதனைகளை யாரிடம் சொல்லியழுவது என்று தெரியாத நிலையில் சிங்களப்படையினால் ஏற்படுத்தப்பட்ட படுகொலைகளின் பிரிவுகளின் துயரங்களையும் விழுப்புண்களின் வேதனைகளையும் தாங்கிக்கொண்டிருக்கின்றோம்.

இன்நிலையில் சிறீலங்கா அரசிற்கும் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் கூத்தும் கும்மாளமும் தேவையா?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்